கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையும் இணைந்து அப்துல்கலாம் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் முஹம்மது சதக் அற்கட்டளை இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா தலைமையிலும், கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் மற்றும் அப்துல்கலாம் அறக்கட்டளை நிர்வாகி அப்துல் கனி முன்னிலையிலும் நடைபெற்றது. செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத் தலைவர் கிரண்குமார் கலந்து கொண்டு அப்துல்கலாமுடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் அவர் மாணவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும், அவர் விண்வெளித்துறையில் சாதித்த பி.எஸ்.எல். வி. ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே 39 முறை பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். இந்தியா உள்பட 29 நாடு களின் 209 செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி இந்தியா மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. இதில் ஒரே ராக்கெட்டில் 109 செயற்கெ கோள்களை அனுப்பி சாதனை படைத்திருப்பது பெருமைக்குரிய செய்தி எனவும் கூறினார்.
மற்றுமொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொருளாதார நிபுணர் சுவாமிநாதன் குருமூர்த்தி நமது இந்திய நாட்டின் பெருமை பாராம்பரியம் கலாச்சாரம் அவற்றினை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் தொகை சற்று பலவீனமாக தெரிந்தாலும் ஒவ்வொரு மக்களின் தனித்திறமையும் பலம் வாய்ந்ததாகவே உள்ளது. எனக் கூறினார். காவல்துறை ஏ.டி.ஜி.பி. ஷகில் அக்தர் மற்றும் கிரானிக்கல் எக்ஸிக்யூட்டிவ் ஆசிரியர் ஆர். புகவான்சிங் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் வழங்கினார். இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் செய்திருந்தார்.
You must be logged in to post a comment.