மதுரை ஊமச்சிகுளம் அருகே வீரபாண்டி பகுதியில் சுமார் 25 வயதுமதிக்கதக்க ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மனநலபாதிப்படைந்த நிலையில்இருப்பதாக அப்பகுதியினர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு தகவல் தெரிவித்தனர்.அத்தகவலின் அடிப்படையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை பேரிடர் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் .ராஜ்குமார் உறுப்பினர் விமல் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பின்னர் மதுரை மாவட்ட ஒன் ஸ்டாப் மையத்தின் நிர்வாக அலுவலர் பிரேமலதா மற்றும் அவரது குழுவினரால் அப்பெண் மீட்கப்பட்டு மதுரை எல்லீஸ் நகரில் உள்ள நீயூகிரியேசன் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.மதுரை மாவட்ட சமூகநலத்துறையோடு இணைந்து செயலாற்றும் one stop centre நிர்வாக அலுவலர் பிரேமலதா பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காப்பகத்தில் இடம் அளித்து தொண்டாற்றி வரும் நீயூகிரியேசன் காப்பக நிர்வாகி குளோரி பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.