17
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு நேரு நகர் மெயின் ரோட்டில் பைபாஸ் பழைய கருப்புசாமி கோவில் அருகே சாலையை ஆக்கிரமித்து மணல் ஜல்லி கொட்டி விற்பனையும் செய்து வருகிறார்கள். இது இரு சக்கர வாகனத்தில் வருபவா்கள் மீது காற்று அடிக்கும் போது மண் கண்ணில் படுகிறது .அப்பொழுது விபத்துக்கள் ஏற்படுகிறது. அதிகாரிகள் தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநகராட்சி இவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமா இல்லை உயிர்பலி ஆன பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.