14
மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் மதியம் 2 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மதுரை பசுமலையில் சேர்ந்த ரவிச்சந்திரன் அரசு பஸ் மோதியதில் நிலைகுலைந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 வாகனம் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இந்த நிலையில் இன்று காலை18/12.2019 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.