Home செய்திகள் விலை வீழ்ச்சியால் வீதியில் கொட்டப்பட்டவந்த தக்காளிவிவசாயிகள் வேதனை.

விலை வீழ்ச்சியால் வீதியில் கொட்டப்பட்டவந்த தக்காளிவிவசாயிகள் வேதனை.

by mohan

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது தற்போது மகசூல் பருவம் என்பதால் அதிக அளவில் தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. இப்படி வரும் தக்காளியை வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கு தான் கேட்டுப் பெறுகின்றனர். காய்ப்பதற்கு கொடுக்கின்ற கூலி கூட விவசாயிக்கு கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கும் தக்காளி தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சந்தைப்படுத்த முடியாமல் தேங்கிவிடுகிறது தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்களை வியாபாரிகள் பாதுகாக்கவும் முடியாமல் அழுகி வீணாகும் நிலை உள்ளதால் வேறுவழியின்றி தேங்கி நிற்கும் தக்காளியை வியாபாரிகளே வீதியின் ஓரத்தில் கொட்டி அழிக்கும் அவலம் உருவாகியுள்ளது. ஒவ்வொரு நேரத்தில் தக்காளி கிலோ 100 ரூபாய் வரை விற்கும் நிலை வந்தால் விவசாயி மகிழ்வதும் இதுபோன்று வீதியில் கொட்டும் நிலை வந்தால் விவசாயி புலம்புவதும் அவர்களின் நடைமுறை வாழ்க்கையாகவே மாறிவிட்டது. இதைத் தவிர்க்க இந்தப் பகுதியில் விடையும் காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை பாதுகாத்து பின் சந்தைப்படுத்த விவசாயிக்கு வாய்ப்பாக குளிர்பதன வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!