Home செய்திகள் சென்னை மாநகர அணிக்கு சாம்பியன் பட்டம்

சென்னை மாநகர அணிக்கு சாம்பியன் பட்டம்

by mohan

மதுரை மாநகரில் உள்ள எம். ஜி. ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த14.10.2019 ந்தேதி நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியை மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  துவக்கி வைத்தார். இப்போட்டிகள் மூன்று நாட்கள் (14.10.2019-16.10.2019) நடைபெற்றன. தடகள போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை மாநகர அணிக்கு நேற்று சாம்பியன் பட்டத்தை தென்மண்டல காவல்துறை தலைவர்  சண்முக ராஜேஸ்வரன்  வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் 7 மண்டலத்தை சேர்ந்த 478 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். புதிய சாதனை படைத்தவர்களுக்கு ரூ. 10000/- பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!