13
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.தலைமைஆசிரியர்லெ.சொக்கலிங்கம்தலைமைதாங்கினார்.மாணவர்களுக்கு அப்துல் காலம் பொன்மொழிகள் எழுதும் போட்டி ,ஓவிய போட்டி,பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.அப்துல் காலம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் எடுத்து சொல்லப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்கள் அய்யப்பன்,வெங்கட்ராமன்,அஜய்பிரகாஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள் செய்து இருந்தார்.விழாவின் நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.