மதுரை மாநகர் தல்லாகுளம் பெருமாள்கோவில் பின்புறம் வைத்து மதுரை கே.புதூர் விஸ்வநாத நகரை சேர்ந்த பூமிநாதன் மகன் கோபால்சாமி @ சரவணன் , முன்விரோதம் காரணமாக சிலர் கொலை செய்ததால் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் மலைச்சாமி தலைமையில் தனிப்படை அமைத்து கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட நபர்களான மதுரை, சக்திவேல் 25, மாரிமுத்து 35, ஸ்வேதா 22 காளீஸ்வரன் 21, ஆகிய நான்கு நபர்களையும் 07.10.2019 அன்று காவல் ஆய்வாளர் கைது செய்தார்..08.10.2019 ந் தேதி மதுரை, மேலமாசி வீதி, கோபால கொத்தன் தெருவை சேர்ந்த மோகன் மகன் ஆதி 21 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்..09.10.2019 ந்தேதி மதுரை, புதிய பங்கஜம் காலனியை சேர்ந்த வீரபத்திரன் மகன் சந்திரபோஸ்@கருவாயன் போஸ் 23 மதுரை, சிம்மக்கல், பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்த முத்து மகன் நவீன் நாகராஜ் 22, கோவை, சித்ரா ஏர்போர்ட், கிருஷ்ணா நகரை சேர்ந்த முத்தையா மகன் பைலட்@ஜஸ்டின் 24, மற்றும் மதுரை, பனங்காடி, காவேரி நகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் வினித் 17 ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார். (11.10.2019) திருச்சி, மேல சிந்தாமணியை சேர்ந்த தங்கராஜ் மகன் தயா@தயாநிதி 18, என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.மேற்படி பத்து நபர்களிடமும் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாகவும் பழிக்குப்பழிவாங்குவதற்காகவும் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்து.
செய்தி. வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.