Home செய்திகள் மதுரை அருகே சிகரெட் கடன் கொடுக்காததால் வாலிபர் அடித்துக்கொலை.

மதுரை அருகே சிகரெட் கடன் கொடுக்காததால் வாலிபர் அடித்துக்கொலை.

by mohan

மதுரை சக்கிமங்கலம், சமத்துவபுரத்தில் சேர்ந்த வினோத் 32 இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு சக்கிமங்கலம் கல்மேடு பகுதியை சேர்ந்த அருண் பாண்டி, கார்த்திக், ஜோதிமணி ஆகிய 3 பேர் பெட்டிக்கடையில் சிகரெட் கடன் கேட்டுள்ளனர்.அப்போது பெட்டி கடையில் இருந்த வினோத்தின் தாயார் சந்தன மேரி தர மறுக்கவே குற்றவாளி மூவர் ஆபாச வார்த்தைகள் பேசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.இதுகுறித்து அந்த மூன்று பேரிடம் வினோத் கேட்டபோது சரமாரியாக தாக்கியுள்ளனர், இதனால் பலத்த காயமடைந்த வினோத்தை அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்தநிலையில் நேற்று மதியம் உடல் நிலை மோசமான நிலையில் வினோத்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர் கூறினார்.எனவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,ஆனால் வினோத்தை சிகிச்சை செய்த மருத்துவர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.இதுகுறித்து சிலைமான் காவல் நிலையத்தில் வினோத்தின் சகோதரி செல்வி கொடுத்த புகாரின் பேரில் மூவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!