Home செய்திகள் ராஜபாளையம் அருகே தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: மனைவி பலி.

ராஜபாளையம் அருகே தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: மனைவி பலி.

by mohan

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி, மனைவி பலி போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் சாவடி தெருவைச் சேர்ந்தவர் தலை மலையான் என்பவரது மகன் வனத்துரைக்கும் சேத்தூரைச் சேர்ந்த சிங்கராஜ் மகள் மலர்கொடிக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளது.இந்நிலையில் கணவன்,மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் இருவரும் விஷம் அருந்தினர்.இதில் சம்பவ இடத்திலேயே மலர்கொடி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் வனத்துரையை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து மலர்க்கொடி தந்தை சிங்கராஜ் அளித்த புகாரின் பேரில் சேத்தூர் ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!