Home செய்திகள் தனது வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தி கொரானா சிகிச்சைக்காக மாற்றிய மதுரையை சேர்ந்த தன்னார்வலர்

தனது வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தி கொரானா சிகிச்சைக்காக மாற்றிய மதுரையை சேர்ந்த தன்னார்வலர்

by mohan

கொரானா பரவல் அதிகம் பரவி வரும் நிலையில் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன.மேலும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் வருவதால் ஆக்ஸிஜன், படுக்கை பற்றாக்குறை நிலவுகிறது.அதிலும் ஏழை எளிய மக்கள் பொருளாதார வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் பல்வேறு சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் இயன்ற உதவிகளை செய்துவருகின்றன.

அந்தவகையில் மதுரை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த திலீபன் சக்கரவர்த்தி தனது நண்பர் பிரசன்னா உடன் இணைந்து சமூகநலனில் அக்கறை எடுத்து தனது சொந்த வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தி கொரானா வால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் மருத்துவமனைக்கு செல்ல பயன்பெறும் வகையில் மாற்றியமைத்துள்ளார்.இவருடைய இச்செயலுக்கு சமூக ஆர்வலரகள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்..

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!