Home செய்திகள் மதுரை நகைக்கடை உரிமையாளரிடம்கடன் வாங்கி தருவதாக கூறி மூன்று லட்சம் மோசடி.

மதுரை நகைக்கடை உரிமையாளரிடம்கடன் வாங்கி தருவதாக கூறி மூன்று லட்சம் மோசடி.

by mohan

மதுரை நகைக்கடை உரிமையாளரிடம்கடன் வாங்கி தருவதாக கூறி மூன்று லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.மேலமாசி வீதியில் உள்ள பிரபல நகைக்கடையின் பங்குதாரர் மதன். இவரிடம் ரவி மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரும் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி நம்ப வைத்துள்ளனர் . பின்னர் அவரிடம் பிராசஸிங் கட்டணம் என்று கூறி ரூபாய் 3 லட்சம் செலவாகும் என்று வாங்கி சென்றுள்ளனர். சில பத்திரங்களையும் வாங்கியுள்ளனர்.ஆனால் அவர்கள் கூறியபடி கடன் வாங்கித் தராமல் ஏமாற்றியது தெரிய வந்தது .இது தொடர்பாக கடை உரிமையாளர் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரவி மற்றும் சதீஷை தேடிவருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com