Home செய்திகள் வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களை அழைத்து கொரான பரிசோதனை செய்து. விழிப்புணர்வு ஏற்படுத்திய சுகாதாரத் துறையினர்.

வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களை அழைத்து கொரான பரிசோதனை செய்து. விழிப்புணர்வு ஏற்படுத்திய சுகாதாரத் துறையினர்.

by mohan

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சுகாதார துறை சார்பாக பாதுகாப்பு நெறிமுறைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சார்பாக சுகாதாரத்துறையினர் மாஸ்க் அணியாமல் வந்தவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்து. மேலும் கொரோனா இரண்டாம் அலை குறித்தும், மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு அளித்து அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com