6
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவா(23) . இவர் மீது கருங்கல் , வெள்ளிச்சந்தை காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.போலிசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதை தொடர்ந்து சிவாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஸ்ரீநாத் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநெரே IAS அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி வெள்ளிச்சந்தை காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் சிவாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
செய்தி வி காளமேகம்
You must be logged in to post a comment.