நாகமலை புதுக்கோட்டை மந்தை தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் முருகா(வயது 55).இவர் நேற்று காலை நாகமலை புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை பாலம் அருகே சில மர்ம நபர்கள் வழிமறித்து அவரை மிரட்டி அவர் வைத்திருந்த 3000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து முருகா நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட கீழக்குயில்குடியைச் சேர்ந்த அம்மாவாசி மகன் கோபால் (வயது 37), செக்கானூரணியைச் சேர்ந்த முருகன் மகன் ஆசைத்தம்பி (வயது 36), மதுரை கொன்னவாயன் சாலையைச் சேர்ந்த தனிக்கொடி மகன் அருண்பாண்டி (வயது 26), நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜாராம் மகன் குமார் (வயது 32) ஆகிய நான்கு பேரை சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் கைது செய்து விசாரித்து வருகிறார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.