கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வது வார்டு இஎஸ்ஐ மருத்துவமனை அருகே பல நாட்களாக தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் உற்பத்தியாகி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் .இஎஸ்ஐ மருத்துவமனை குடியிருப்பு வாசிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படும் என நமது கீழை நியூஸில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதன் செய்தி எதிரொலியாக நேற்று தண்ணீர் தேங்கி இருந்த இந்தக் மணல் கொட்டி ஜேசிபி இயந்திரம் கொண்டு முற்றிலுமாக மூடினார்கள் பலநாள் பிரச்சனைக்கு ஒரே நாளில் தீர்வு கண்டு நோய்களிலிருந்து காப்பாற்றிய கீழை நியூஸ் செய்தி தளத்திற்கும் இஎஸ்ஐ மருத்துவமனை குடியிருப்புவாசிகள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் நன்றியை தெரிவித்தனர் இதற்கு உதவிய மதுரை மாநகராட்சி மாநகராட்சி ஆணையாளர் விசாகன் நமது (சத்திய பாதை மாத இதழ்) கீழை நியூஸ் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.