11
மதுரை மாவட்டம் திருமங்கலம் வெளியூர் செல்லும் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. மேலாளரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இதனை அடுத்து அந்த வங்கிக்கு வந்த நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி அடித்து பின் வங்கியை மூடினர் .வங்கிகளைப் கிளையை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை எடுத்தபிறகு வங்கியின் கிளை திறக்கப் படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.