14
மதுரை வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் முகேஷ் குமார் என்பவர் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விளக்குத்தூண் சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தான் வைத்திருந்த 40,000 பணத்தை தவிரவிட்டுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை காவலர் விக்னேஷ்வரன் பணம் தொலைந்த 15 நிமிடத்தில் பணத்தின் உரிமையாளரிடம் காவல் உதவி ஆய்வாளர் .கோமதி முன்னிலையில் ஒப்படைத்தார். மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் விக்னேஷ்வரன் என்பவரின் நற்செயலை பாராட்டினார். 15 நிமிடத்தில் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.