மதுரை பைபாஸ் VOC பாலத்தில்குறுகலான பாதை இருப்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ் கார்கள் அதிவேகத்தில் செல்வ காரணத்தினாலும் அடிக்கடி இந்த பாலத்தில் விபத்து ஏற்படுகிறது.. இந்த பாலம் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது . இந்த பாலத்தில் தினசரி 1 இலிருந்து 3 விபத்துக்கள் வரை நடைபெறுகிறது இதில் பலர் படுகாயமடைந்து போக்குவரத்து நெரிசலும் அதிகம் ஏற்படுகிறது.மாலை இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது..அறிவழகன் என்கின்ற கல்லூரி மாணவர் காயம் ஏற்பட்டது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது ..அந்த சமயத்தில் சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் கலைவாணி காயமடைந்த நபர்களை ஓரமாக அமரவைத்து 108 வாகனத்திற்கு தகவல் கொடுத்து போக்குவரத்தையும் ஆய்வாளரின் சரி செய்தார் ..சாதாரண விபத்து என்று செல்லாமல் காயம் பட்டவர்களை அருகிலேயே இருந்து அவசர கால ஊர்திகளுக்கு தகவல் கொடுத்த செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆய்வாளரை வெகுவாக பாராட்டி சென்றனர் ..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.