கொரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளநிலையில் நாடு முழுவதும் கூலித்தொழிலாளர்கள் அன்றாடம் பிழைப்பு நடத்தி வருபவர்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு சமூக அமைப்புகளும் தன்னார்வ தொண்டர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.அந்த வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஆணைக்கிணங்க மதிமுக கட்சி சார்பாக தொண்டர்களும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27வது ஆண்டு விழாவை முன்னிட்டும் மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு தலைமையில் மதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அரிசி சப்பாத்தி மாவு முக கவசம் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வந்தனர்.மேலும் மதிமுக கட்சியினர் நேரில் வந்து வாங்க முடியாத மக்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் வடக்கு மாவட்டத் துணைச் செயலாளர் பெரியசாமி மேற்கு ஒன்றிய செயலாளர் புகழேந்தி பரவை பேரூர் செயலாளர் கூழு @ ராமமூர்த்தி, துரைப்பாண்டி பூப் பாண்டி ,பாலமுருகன் சுபா ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.