6
மதுரை திருநகரில் தெருவில் நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. அந்த நாய்க்கு அதோ பகுதியை சேர்ந்த ஒருவர் சில வருடங்களாக உணவு அளித்து வந்துள்ளார். அதிகாலை அவரின் வீட்டு வாசலில் அந்த நாய் இறந்து கிடந்துள்ளது …உடனடியாக அவர் திருநகர் பக்கம் குழுவினரை தொடர்பு கொண்டு திருநகர் குழுவினரின் உதவியுடன் அனைத்து சடங்குகளும் செய்து தன் வீட்டின் உள்ளேயே அடக்கம் செய்துள்ளார் .தெருவில் வாழும் நாயாக இருப்பினும் அதற்கு அன்பாக சோறூட்டி வளர்த்தவர் கண்கலங்கிய காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.