Home செய்திகள் மதுரை கூத்தியார்குண்டு பகுதி இளைஞர்கள் நியாயவிலை கடையில் கொரோனா நிவாரான பொருள்களை வாங்க நிற்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்

மதுரை கூத்தியார்குண்டு பகுதி இளைஞர்கள் நியாயவிலை கடையில் கொரோனா நிவாரான பொருள்களை வாங்க நிற்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்

by mohan

தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதியாக ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரண பொருட்களும்,1000 ரூபாயும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனை தொடர்ந்து நேற்றைய தினம் பொதுமக்களுக்கு நிவாரண பொருள்களை நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் டோக்கன் முறையில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக நியாயவிலை கடைகளின் முன்பு இடைவெளி விட்டு நிற்பதற்கு ஏற்பாடுகள் விநியோகம் செய்யப்பட்டு வழங்கி வருகின்றனர்.

இதனையொட்டி இன்று காலை முதலே மதுரை அவனியபுரம் , திருமங்கலம், கூத்தியார்குண்டு பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருள்களை வாங்கி சென்றனர்.இந்தநிலையில் மதுரை கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள நியாயவிலை கடையின் முன்பு பொதுமக்களுக்கு அந்த பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர். நோய்எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும் கபசுரக் குடிநீரையை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், முதியோர்கள் என அனைவரும் பருகினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!