8
மதுரை மாவட்டம். கருப்பாயூரணி, களிமங்கலம் கிராமத்தில், இரண்டு நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, தொலைக்காட்சியில் செய்தி வந்ததாக கூறி, பொய்யான தகவலை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவேற்றம் செய்ததாக, அதே ஊரை சேர்ந்தவர், கருப்பாயூரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து, 6 – நபர்களை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன். இது போன்று பொய்யான தகவலை Whatsapp & Facebook ல் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.