சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகராட்சி சார்பாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடைபெற்றது. ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மாணவர்களுக்குகொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வும், கைகழுவும் முறைகளையும் விரிவாக விளக்கினார்.
உணவு பாதுகாப்பாக எவ்வாறு சாப்பிடலாம் என்கிற தகவலையும், கலர் அதிகமான பொருட்களை கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். நகராட்சி பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமு ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர் .மாணவர்கள் அய்யப்பன், நதியா ஆகியோர் கை கழுவும் முறைகள் குறித்தும், வைரஸ் குறித்தும் விரிவான தகவல்களை வழங்கினார்கள் .நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.