Home செய்திகள் பெண் ஆணாகமாறியவரை காதல் திருமணம் செய்யவேண்டி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

பெண் ஆணாகமாறியவரை காதல் திருமணம் செய்யவேண்டி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

by mohan

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வீட்டி என்ற இளம்பெண் செவிலியராக உள்ள நிலையில் அவருடன் பணியாற்றிய  ஆணாக மாறிய திரு நம்பியை கடந்த நான்கு வருடங்களாக காதல் செய்து வந்துள்ளார். தங்களது காதலை பெற்றோரிடத்தில் தெரிவித்ததை அடுத்து பெற்றோர்கள் எதிர்ப்பின் காரணமாக தூத்துக்குடியை விட்டு மதுரையை சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா  தஞ்சமடைந்தனர் பின் அவர்கள் மூலமாக  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தொடர்ந்து பெற்றோர்களிடம் இருந்து தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் மிரட்டல் வருவதால் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளதாக கூறினர். இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியாளர்.  சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் செல்வதற்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்து உள்ளார். தற்போது திருநங்கை பாரதி கண்ணம்மா  தலைமையான குழுவினர் தற்போது தூத்துக்குடி மாவட்டம் திரு நம்பியும் மற்றும் அந்தப் பெண்ணையும் அவர்களுக்கு சொந்த ஊருக்கு அழைத்து கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!