Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திருமணவிழாவில் டிஜிட்டல் மொய் மதுரை ஐடி தம்பதியினரின் புதிய முயற்சிக்கு – கொரோனா காலங்களில் கூட்டங்களை தவிர்க்கும் புதிய முயற்சி…

திருமணவிழாவில் டிஜிட்டல் மொய் மதுரை ஐடி தம்பதியினரின் புதிய முயற்சிக்கு – கொரோனா காலங்களில் கூட்டங்களை தவிர்க்கும் புதிய முயற்சி…

by ஆசிரியர்

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் காதுகுத்து, கல்யாணம் இப்படி எந்தவொரு சுப நிகழ்ச்சிகள் என்றாலும் மொய் என்பது முக்கிய இடம் பிடிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்களின் உறவினர்களும் நண்பர்களும் தங்களால் முடிந்த பணம் , நகை உள்ளிட்டவற்றை மொய்யாக வழங்குவார்கள். இதனை சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இல்லங்களிலோ, மண்டபங்களிலோ நுழைவாயில் மொய் நோட்டு வைக்கப்பட்டு அதில் எழுதுவார்கள்.

மொய் செய்தவர்கள் மீண்டும் அவர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்பது கௌரவமாக பார்க்கப்படும். இதனால் எந்த ஒரு விசேஷத்தையும் தவறவிடமால் சென்று பதில் மொய் செய்வார்கள். இந்த மொய் நடைமுறை பணத்தின் மூலம் விசேஷங்களை நடத்துபவர்கள் குடும்பத்தினரின் பொருளாதார தேவையை நிறைவேற்ற உதவும். பொருளாதார அவசரகாலத்தில் இல்லதிருவிழா ,மொய்விருந்து என்ற பெயரிலும் விசேங்களை நடத்தி உறவினர்களுக்கு உணவுகளை வழங்கி மொய்களை பெறுவார்கள்.

இதுபோன்று மொய் வழக்கம் என்பது இன்றைய காலங்களில் குறைந்து வருவதால் அதனை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் மதுரையை சேர்ந்த ஐடியில் பணிபுரியும் புதுமண தம்பதியினர் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரை பாலெரங்காபுரம் சரவணன் என்பவருக்கும் இன்று மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் மொய் எழுதும் பகுதிகளில் மொய் எழுதுபவர்கள் டிஜிட்டல் முறையில் போன்பே, கூகுள் பே மூலம் மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் மொய் செய்யும் வகையில் QRகோடுடன் கூடிய பத்திரிக்கையை வைத்திருந்தனர்.

இதையடுத்து திருமண விழாவிற்கு வந்தவர்கள் தங்களது மொய் தொகையை கூகுள் பே மூலமாக செலுத்திசென்றனர்.

மொய் எழுதுவது என்பது கௌரமாக பார்க்கும் வழக்கம் இருப்பதால் மொய் செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்காக திருமண விழாவிற்கு வருகை தரும் நிலை உருவாகும் என்பதால் கொரோனா காலங்களில் தடுப்பு நடவடிக்கையாக அதிக அளவிற்கு கூடும் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும் அலைச்சலை குறைக்கும் வகையிலும் இது போன்ற முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும், மேலும் மொய் எழுதும் போது சில்லறை, கவர் ஆகியவை கிடைப்பது சிரமாக உள்ளநிலையில் இது போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை முன்னெடுத்துள்ளதாகவும், நேரில் வந்த மொய் பணம் செலுத்த முடியாதவர்கள் கூட கூகுள் பே, போன் பே மூலமாக செலுத்தலாம் என்பதாலும், இதன் மூலமாக யார் எவ்வளவு பணம் வழங்கியுள்ளனர்என தெரிந்தால் அவர்களுக்கு திரும்ப மொய் செய்வது குறித்த உரிய கணக்கு தெரியும் எனவும் மணப்பெண் சிவசங்கரி தெரிவித்தார்.

மொய் செய்வதற்காக புதிய முயற்சியை எடுத்த மணமக்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்.

எல்லாம் டிஜிட்டல் மயமாகிவரும் சூழலில் மொய் செய்வதை டிஜிட்டல் மயமாக்கி அலைச்சலை குறைக்க வழிவகை செய்தது ஒரு வகையில் பாராட்டுதலுக்குரியதே! செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!