Home செய்திகள் பள்ளி மாணவர்களை அலட்சியப்படுத்தில் மதுரை அரசு பேருந்துகள் ..

பள்ளி மாணவர்களை அலட்சியப்படுத்தில் மதுரை அரசு பேருந்துகள் ..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வழியாக செல்லும் அரசு பேருந்துகள் பல முறைப்ப்படி நிறுத்தங்களில் நிறுத்தப்படாமலே செல்கிறது.

மேலும்  மாணவர்கள் அதிகப்படியாக படியில் தொங்கியபடி பயணம் செய்து வருகிறார்கள். உதாரணத்திற்கு இன்று (20/12/2018) பைபாஸ் சாலை திரும்பும் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, மாணவர்கள் ஏறும் முன்பே வாகன ஓட்டுனர்கள் வண்டியை எடுத்ததால், ஓடும் பேருந்தில் ஆபத்தான சூழலில் ஏறும் நிலை ஏற்படுகிறது.

அப்பகுதி மாணவர்கள் இறங்கியதை கூட கவனிக்காமல் வாகனத்தை எடுத்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 செய்தியாளர்:- வி.காளமேகம், மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!