Home செய்திகள் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது.

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது.

by mohan

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த புங்கனூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது.புங்கனூர் ஊராட்சியில் புங்கனூர், மல்லுக்குடி, தொழுதூர், வரவக்குடி, உள்ளிட்ட 7 கிராமங்களில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக கால்நடை மருத்துவர்கள் நேரடியாக சென்று அங்கு உள்ள கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி மற்றும் மாடுகளுக்கான காப்பீட்டு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில்,ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா பேகம் கமால்தீன் முன்னிலையில், கால்நடை உதவி மருத்துவர் லெனின் தலைமையில் விபிதா, அனுசியா ஆய்வாளர் ஆனந்த் உதவியாளர் முத்துலட்சுமி கலந்து கொண்டனர்.மேலும் புங்கனூர் ஊராட்சி சுற்றியுள்ள 7 கிராமங்களிலிருந்து கால்நடை வளர்ப்பவர்கள் கோமாரி தடுப்பூசி மற்றும் மாடுகளுக்கான காப்பீடு வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!