Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் கடையடைப்பு..கீழக்கரையில் ஜனதா பந்த் இன்றே தொடங்கி விட்டதா?.. இன்றே (21/03/2020) கடைகளை அடைக்க காவல்துறை வலியுறுத்தல்..

கீழக்கரையில் கடையடைப்பு..கீழக்கரையில் ஜனதா பந்த் இன்றே தொடங்கி விட்டதா?.. இன்றே (21/03/2020) கடைகளை அடைக்க காவல்துறை வலியுறுத்தல்..

by ஆசிரியர்

நாளை (22/03/2020)  இந்திய தேசம் முழுவதும் ஒருநாள் மருத்துவம் மற்றும் காவல்துறையை தவிர்த்து அனைத்து துறைகளும், கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும், அடைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று பாரதப் பிரதமர் சுய அடைப்புக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார், ஆனால் கட்டாய சட்டமல்ல, ஆனால் அதற்கு ஒத்துழைக்கும் விதமாக மாநில அரசும், அமைப்புகளும் வணிக்கத்தை நிறுத்தி ஒத்துழைக்க முன் வந்தனர்.

ஆனால் பொதுமக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற கூட சந்தர்ப்பம் அளிக்காமல் இன்று மாலை 03.00 மணி முதலே மறு உத்தரவு வரும் வரை கீழக்கரையில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்து வருகின்றார்கள்.

இது சட்டரீதியான அரசு உத்தரவா?? காவல்துறை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பிரச்சினைகளை கருத்தில் கொள்ளுமா??..

கீழை நியூஸ்காக SKV சுஐபு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!