Home செய்திகள் முகைதீனியா பள்ளி மாணவர்கள் சார்பாக வெள்ள நிவாரணத்திற்காக வசூல் செய்யப்பட்ட தொகை நாசா அமைப்பினரிடம் வழங்கப்பட்டது..

முகைதீனியா பள்ளி மாணவர்கள் சார்பாக வெள்ள நிவாரணத்திற்காக வசூல் செய்யப்பட்ட தொகை நாசா அமைப்பினரிடம் வழங்கப்பட்டது..

by ஆசிரியர்

சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் கீழக்கரையில் உள்ள பல பள்ளி கூடங்கள், சமூக அமைப்புக்கள் பொருட்களும், பொருளாதார உதவிகளும் செய்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி மாணவர்கள் இந்திய ரூபாய்.43,610/- வசூல் செய்திருந்தனர்.  அத்தொகையை வடக்குத் தெரு சமூக நல அமைப்பான NASA அமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினர்.  ஏற்கனவே இந்த அமைப்பு சார்பாக இந்திய ரூபாய்.1,53,360/- வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கேரள நிவாரணத்திற்காக வசூல் செய்யப்பட்ட தொகையை நாசா அமைப்பினர் நேரடியாக கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று வழங்க உள்ளார்கள்.

 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!