11
சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் கீழக்கரையில் உள்ள பல பள்ளி கூடங்கள், சமூக அமைப்புக்கள் பொருட்களும், பொருளாதார உதவிகளும் செய்து வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி மாணவர்கள் இந்திய ரூபாய்.43,610/- வசூல் செய்திருந்தனர். அத்தொகையை வடக்குத் தெரு சமூக நல அமைப்பான NASA அமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினர். ஏற்கனவே இந்த அமைப்பு சார்பாக இந்திய ரூபாய்.1,53,360/- வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கேரள நிவாரணத்திற்காக வசூல் செய்யப்பட்ட தொகையை நாசா அமைப்பினர் நேரடியாக கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று வழங்க உள்ளார்கள்.
You must be logged in to post a comment.