Home செய்திகள் கீழக்கரை- முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

கீழக்கரை- முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

by mohan

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் என்.எஸ்.எஸ் சார்பில், சர்வதேச. போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையேற்று பயிற்சியை துவங்கி வைத்தார். மேலும் இராமநாதபுரம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர். துரைமுருகன் முன்னிலை வகித்தார் மற்றும் இராமநாதபுரம் உதயம் போதை பொருள் ஒழிப்பு மையம் மூலமாக. மாணவர்களுக்கு போதைப்பொருளின் தீமைகள் குறித்தும் அதன் அபாயகரமான விளைவுகள் குறித்தும் உதயம் போதை பொருள் மைய கவுன்சிலர்கள்.

பவளமணி மற்றும் சத்யபிரியா ஆகியோர்கள் விளக்கினர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் வரவேற்றார் .திட்ட அலுவலர். வேல்முருகன் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி கூறினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் .மருதாச்சல மூர்த்தி. சத்தியேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர் இதில் 100மேற்பட்ட மாணவர்கள் போதை விழிப்புனர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!