கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு,(WJUT) “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” திண்டுக்கல் மாவட்டம் மூலமாக, நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டம் சில பகுதிகளுக்கு “கீழை நியூஸ்” நிறுவனம், மதுரை ஓகே சைக்கிள் நிறுவனம் நிஜாம், திண்டுக்கல் நான்கு வழிச்சாலை நில எடுப்பு வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் இன்னும் பலர் இணைந்து பல ஆயிரம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களான அரிசி, பெட்சீட், போர்வை, துண்டு, மெழுகுவர்த்தி, பால் பவுடர், பிஸ்கட், தீப்பெட்டி, போன்ற பொருட்களை “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” திண்டுக்கல் மாவட்டம் மூலமாக அனுப்பி வைத்தனர்.
இதற்கான முழு ஏற்பாடுகளை (WJUT) “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” செய்தி தொடர்பாளர் மற்றும் பூதக்கண்ணாடி மாத பத்திரிக்கையின் நிர்வாகம் மற்றும் பொறுப்பாசிரியர் திண்டுக்கல் ஜெ.அஸ்கர் அலி செய்திருந்தார்.
You must be logged in to post a comment.