வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. தாசில்தார் சுந்தர் வரவேற்றார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நந்தீஸ்வரன் தலைமை தாங்கினார்.கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன் சிறப்புரை ஆற்றினார். பொதுமக்களிடம் வாங்கப்பட்ட மனுக்கள் வாங்கப்பட்டு தகுதியானவர்களுக்கு உதவி வழங்கப்பட்டது.சமூக நல திட்ட தாசில்தார் பழனிகாட்பாடி அதிமுக ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ் கே.வி.குப்பம் அதிமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன், துணை தாசில்தார் ராஜேஸ்வரிவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் கிராம நிர்வாக அலுவலக சங்க வட்ட கிளை தலைவர் ஜோதீஸ்வரன் வருவாய் ஆய்வாளர்கள் உதயகுமார்.செந்தாமரை.சித்ரா, சுமதி, ப்ரியா, கிராம நிர்வாக அலுவலர்கள் அன்பரசு, திலிப், கோபி, சேகுவாரா வெங்கடேசன், முனியப்பன், மணிமேகலை, ஜெயந்தி மற்றும் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் தாலுகா அலுவலக வாயிலில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.