தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் விழா திமுக சார்பில் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் புதுத்தெருவில் திமுக தொண்டரும், திமுக இளமகிழனின் தீவிர விசுவாசியுமான தங்கக்கொடி என்பவர் புதிதாக நகை கடையை திறந்து வைக்க திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் அதற்கு அவர் கலைஞரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதால் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வருகை தருவதும் சிரமம் என்றார். ஆனால் திடீரென்று உசிலம்பட்டி நாடார் புதுத் தெருவில் உள்ள நகைக்கடை முன்பு தனது ஆதரவாளர்களுடன் வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதனை தொடர்ந்து நகைக்கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றியும், இனிப்புகள் வழங்கினார்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.