13
கொரானா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அன்றாட வருமானம் நலிந்து வாழவாதாரரம் இழக்கும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் தேவையுடையோரை கண்டறிந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பி எஸ் எம் மருத்துவமனை மற்றும் அறகட்டளை சார்பாக அத்தியாவசிய சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு கீழக்கரை தில்லையேந்தல் கிராமம் மற்றும் உமையால்புரம் கிராமம் முழுவதும், அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது.
இதில் சமூக ஆர்வலர்கள் தில்லையேந்தல் பஞ்சாயத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, ஹமீதியா பள்ளி மாணவர் சங்க செயலாளர் இஞ்சினியர் கபீர், பி எஸ் எம் டிரஸ்ட் நிர்வாகிகள், நெய்னா அசாருதீன், ஜாஹிர் உசேன், நாசர் பஞ்சாயத்து அலுவலர் மங்களசாமி மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
You must be logged in to post a comment.