முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், மண்டல தலைவர்கள் தங்கராஜ், செந்தூர்பாண்டியன், ஜசன்சில்வா, மாவட்ட துணை தலைவர்கள் எ.டி.பிரபாகரன், அருணாசலம், ஜான்வெஸ்லி, மாவட்ட பொது செயலாளர் சாமுவேல் ஞானதுரை, மாவட்ட செயலாளர்கள் பிரபாகரன்,சேவியர் மிஷியர், ராஜபாண்டியன், தனுஷ், ஜேசுதாஸ், மாநில மகிளா காங்கிரஸ் துணை தலைவி கனியம்மாள், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி, தெற்கு மண்டல செயலாளர் சண்முக சுந்தரம், தெற்கு மண்டல துணை தலைவர் கன்னிசாமிபாண்டியன், வார்டு தலைவர்கள் கிருஷ்ணன், முத்து வேல், அல்போன்ஸ், பேரையா, தெய்வகனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.