13
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர் .
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி அடிமை மற்றும் ,லீ புறம் பகுதியைச் சேர்ந்த அட்லீ ஜெபா, அட் லின் கௌதம் முள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த சாமி அய்யா ஆகிய 4 பேரும் சவுதி அரேபியாவில் மீன்பிடி வேலைக்காக பணியில் இருந்தனர் அவர்கள் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சவுதி அரேபிய கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக ஈரான் கடற்படை கைது செய்து கடந்த மாதம் 25ம் தேதி சிறையில் அடைத்தது.
இதனைத் தொடர்ந்து குலச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவர் அணி மீனவர் அமைப்புச் செயலாளர் கேப்டன் முயற்சியில் விடுவிக்கப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.