இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் கருப்பசாமி, 41. இவரது மகன் கண்ணன், 18. இருவரும் மன்னார் வளைகுடா கடல் மண்டபம் தென் பகுதியில் நாட்டுப் படகில் 24/10/2018 காலை நண்டு வலை விரித்தனர். அப்போது மழை பெய்ய துவங்கியது. இதனையடுத்து கரை திரும்ப முடிவு செய்த அவர்கள் வலையை அடுக்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் மின்னல் பாய்ந்ததில் நிலை குலைந்த இருவரும் கடல் நீரில் மூழ்கினார். அப்போது அது வழியே கரை திரும்பிய விசைப்படகு மீனவர்கள் நீரில் தத்தளித்த கண்ணனை மீட்டு கரை சேர்த்தனர். மாயமான கருப்பசாமியை தேடினர். இந்நிலையில் கருப்பசாமி உடல் கடந்த மண்டபம் அருகே மணலி தீவு பகுதியில் ் இன்று மதியம் ஒதுங்கியது. மண்டபம் வன பணியாளர்கள் கருப்பசாமி உடலை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மண்டபம் மெரைன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம். 12
previous post
You must be logged in to post a comment.