15
தமிழகத்தில் பெரும்பாலான வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்றிதழ் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் வாகன மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கணினி மயமாக்கப் பட்டதால், இதுவரை எந்த ஒரு மாசு கட்டுப்பாட்டு பரிசோதனை நிலையத்திலும் அதை முறைப்படுத்தாத காரணத்தினால் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்யும் வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெற முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளார்கள்.
மேலும் கணினி பயன்பாடு முறைப்படுத்தும் வரையில் புகை சான்றிதழ் தற்காலிகமாக பழைய முறையை பின்பற்றி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வாடகை கார் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.