தையல் கலை என்பது ஒரு நுண்ணிய கலையாகும். சாதாரண மனிதன் முதல் அனைத்து தரப்பினரையும் தனித்தன்மையான ஆடை வடிவமைப்பு மூலம் அழகூட்டுவது தையல் கலையாகும். கீழக்கரையைச் சார்ந்த இளைஞர்கள் “FB TAILORS & GARMENTS” என்ற தையல் நிறுவனத்தை சென்னையில் கடந்த சில வருடங்களாக நடத்தி வந்தார்கள்.
சென்னை வியாபாரத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்று (01/01/2019) இராமநாதபுரத்தில் 12A, GH Road, Mohammad Sathak Centre முதல் மாடியில் வியாபரத்தின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார்கள். எதையும் நவீனத்துடன் வித்தியாசமான முறையில் அணுகினால் வெற்றி பெற முடியும் என்பதற்கு இத்தொழில் செய்து வரும் இளைஞர்கள் ஒரு உதாரணம். பாரம்பரிய முறையாக இருந்த தையல் கலையை அனைவரும் விரும்பும் வகையில் வடிவமைத்து வெற்றி கண்டுள்ளார்கள்.
புதிதாக தொடங்கியிருக்கும் இத்தொழில் வெற்றி பெற கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.
You must be logged in to post a comment.