48
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.பாஜக சார்பில் குஷ்பு பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு, குஷ்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி, என்னால் இனி பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ள முடியாது.சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.