18
கீழக்கரையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகயின் சார்பில் தமிழகமெங்கும் குடியுரிமை சட்டத் திருத்தம் (CAA,NPR,NRC) எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
அதை தொடர்ந்து கீழக்கரை திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் தி.மு.க நகர் கழக செயலாளர் தலைமையிலும், தோழமைக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையிலும் தி.மு.க மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பவானி ராஜேந்திரன்EX, MP கீழக்கரை வடக்குத் தெருவில் அமைந்துள்ள நகர் திராவிட முன்னேற்றக் கழகம் அலுவலகத்தில் 03:02:2020 அன்று மாலை 5:30 மணியளவில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இதில் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணிக் கட்சித் நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு கட்சி, மதம், ஜாதி, அமைப்பு என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் கையெழுத்து பெறப்பட்டது.
You must be logged in to post a comment.