திமுகவின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்சியின் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் சென்னைக்கு சென்று கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அதனைத் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்
அதன்பின் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மதுரையிலிருந்து காரில் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் ஆயிரக்கணக்கான கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரை பட்டாசுகள் வெடித்து ஆர்ப்பரித்து உற்சாக வரவேற்பு அளித்தனர் எல்லையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு மாலையும் அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மாவட்டச் செயலாளர் கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் உடன் ரோட்டில் ஊர்வலமாக நடந்து வந்து பார்த்திபனூர் வரை நடந்து வந்து மக்களின் வரவேற்பை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பரமக்குடி சத்திரக்குடி ஆகிய இடங்களிலும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டு இராமநாதபுரத்திற்கு வந்தடைந்தார்
இராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் இராமநாதபுரத்திலுள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சிப் பணி குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ முருகவேல் முன்னாள் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜலீல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு முன்னாள் எம்எல்ஏ திசை வீரன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் கே ஜே பிரவீன் , மண்டபம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர், அர்.டி.கார்த்திகேயன், முன்னாள் ஆர்எஸ் மங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் நல்ல சேதுபதி, முன்னாள் மண்டபம் ஒன்றிய கழக செயலாளர் கனகராஜன், நயினார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் சக்தி, மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.