10
கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிப்பு!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தினந்தோறும் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் மனுகொடுக்க வருகின்றனர்.
இதனால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் விதமாக அலுவலக கட்டிடம் முழுவதும் 13/06/20 சனிக்கிழமை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும் காவலர்கள் மற்றும் பொதுமக்களின் நலனிற்காக அலுவலகத்திற்கு வரும் அனைவரும் வெப்ப பரிசோதனை கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.
You must be logged in to post a comment.