Home செய்திகள் நியாயவிலை கடையில் நேரம் குறிப்பிடாமல் முறைப்படுத்தாத அறிவிப்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூடியதால் பரபரப்பு!

நியாயவிலை கடையில் நேரம் குறிப்பிடாமல் முறைப்படுத்தாத அறிவிப்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூடியதால் பரபரப்பு!

by Askar

நியாயவிலை கடையில் நேரம் குறிப்பிடாமல் முறைப்படுத்தாத அறிவிப்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூடியதால் பரபரப்பு!

நாட்டில் கொரொனா நோய்தொற்று உள்ள சூழலில் 144 தடைஉத்தரவு அமுலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்து வரும் சூழ்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்க அரசு அறிவித்தது. அதன்பேரில் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் DD36 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வரும் நியாயவிலை கடைகளில் கடந்த வாரம்முதல் வீடுவீடாக டோக்கன் கொடுக்கப்பட்டு நேரம் குறிப்பிட்டு முறையாக பொருள்கள் வழங்கப்பட்டது. அதில் ஒருசில குடும்ப அட்டை தாரர்கள் மட்டும் அரிசி வரவில்லை என திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு இன்று அரிசி வழங்கப்படும் என நேரம் குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டதால் குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைமுன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக கூடினர் அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!