13
வத்தலக்குண்டு அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 72 ஆயிரத்து 440 ரூபாய் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைப்பு..
நேற்று மாலை (26/03/2024) வத்தலக்குண்டு அருகே விருவீடு கள்ளர்மடம் சோதனை சாவடியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் சுப்பிரமணியன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரூபாகரன் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை ஆய்வு செய்தனர். அப்பொழுது முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 72 ஆயிரத்து 440/- ரூபாயை கைப்பற்றி நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி இடத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் அந்த பணத்தை வட்டாட்சியர் தனுஷ்கோடி கருவூலத்தில் ஒப்படைத்தார்.
You must be logged in to post a comment.