12
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணக்கம்பட்டி சேர்ந்த அஜய் கிருபாகரன் ராஜ் என்ற 32 இளைஞரும் பெருமாள் மலையைச் சேர்ந்த கண்ணன் 17 வயது இளைஞர் இருவரும் பழனியில் இருந்து கொடைக்கானல் நோக்கி செல்லும் பொழுது தேக்கந்தோட்டம் அருகே எதிரே சாலையில் மாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் மாடு மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கணக்கம்பட்டியை சேர்ந்த அஜய் கிருபாகரன் ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.இவர் கொடைக்கானலில் வனத்துறையில் அலுவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைகாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
You must be logged in to post a comment.