திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள சாலைகள் 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனியார் பராமரிப்புக்கு தமிழக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களைக் கொடுத்து தாரைவார்த்து உள்ளதாகவும் இதனை கண்டிக்கும் வகையில் திண்டுக்கல்,ஆத்தூர், நத்தம், வத்தலகுண்டு, கொடைக்கானல் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 150-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் திங்கள் அன்று திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள் பழனி கோட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள் இவர்களுடைய வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளதால் சாலைப்பணியாளர்கள் இந்த போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றப் போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் பொதுச்செயலாளர் அம்ச ராஜ் பொருளாளர் தமிழ் மாநிலச் செயலாளர் ராஜமாணிக்கம் சாலை ஆய்வாளர் சங்கத்தின் முன்னாள் மாநில பொது செயலாளர் எஸ் எம் ஜெயசீலன் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
7
previous post
You must be logged in to post a comment.