ரயில் இன்ஜின் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி …..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் அருகே இன்று காலை 11.30 மணி அளவில் ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கிடப்பதாக மதுரை ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மதுரை ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவரின் அடையாளங்கள் கண்டறியப்படவில்லை. விபத்தில் இறந்தவர் வெள்ளை நிற சாரதி சட்டையும் வேட்டியும் அணிந்து இருந்தார்.  இந்த விபத்து இறந்தவரின் கவனக்குறைவினாலே நடந்திருக்க கூடும் என காவல்துறையினர் கருதிகின்றனர். இறந்தவரை பற்றிய தகவல் தெரிந்தால் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்

.வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..