8
மூணாறு டாப்ஸ்டேஷன் என்கிற ஊரைச்சேர்ந்த கேபிள்ஆப்பரேட்டராக பணிசெய்யும் கூஸ்டர்(வயது 43) மற்றும் அவரது மனைவி முனியம்மாள் ஆகிய இருவரும் சென்னை பெருங்களத்தூர் நோக்கி சம்பந்தியின் துக்க நிகழ்விற்கு செல்வதற்காக SETC பேருந்தில் பயனித்தனர்.
அப்போது பேருந்து திண்டுக்கல் வந்தடைந்தபோது எதிர்பாராதவிதமாக கூஸ்டருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பேருந்துலேயே மரணமடைந்தார். அவர் பேருந்திலேயே மரணம்அடைந்தது பயணிகளிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
You must be logged in to post a comment.